Menu
Your Cart

அகதியின் பேர்ளின் வாசல்

அகதியின் பேர்ளின் வாசல்
-5 %
அகதியின் பேர்ளின் வாசல்
ஆசி.கந்தராஜா (ஆசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பிரிவினைக்குள்ளான ஜெர்மனியின் கிழக்கு பேர்ளினில் இறங்கி மேற்கு பேர்ளின் வழியாகப் பல்வேறு தேசங்களுக்கும் புலம்பெயர்ந்த அகதிகளின் வாழ்வு குறித்த பிரதி இது. ஐரோப்பியப் பெருநகரமொன்றிலிருந்து ஆரம்பிக்கும் நாவல் இலங்கை இனக்கலவரம், போர் ஆகியவற்றின் இணைகோடாகப் பயணித்து நீண்ட அகதி வாழ்வையும் அதன் மூல காரணங்களையும் திக்கிறது. அக, புறச் சிடுக்குகளுக்குள்ளால் அகதிகளின் அந்தர வாழ்வைக் கவனப்படுத்துகிறது. பிளவுபட்ட ஜெர்மனியின் சிக்கலான நில அமைப்பையும் ‘போட்ஸ்டம்’ உடன்படிக்கையின் விளைவுகளையும் குறித்து வரலாற்றுத் தகவல்கள், கதாபாத்திரங்களின் உரையாடல்கள், வர்ணனைகள் மூலம் அகதிகளின் துயரமான வாழ்வைப் பேசுகிறது. அவர்களின் வருகையையொட்டி ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, ஊதியக் குறைப்பு, வேலைவாய்ப்பின்மைகள் ஆகியவற்றைப் புனைவில் மீட்டெடுத்து ஒரு காலத்தை வாசகர்முன் திறந்துவைக்கிறது. அரசியல் தஞ்சம் கோரி அகதிகளாயும் பரிதாபத்துக்குரியவர்களாயும் வந்திறங்கிய அவர்களின் துல்லியமற்ற, பதற்றமான அனுபவங்களையும் மேல்நாட்டுக் கல்விமூலமாகப் பலாபலன் அடைந்தோர் வாழ்வையும் இப்பிரதியில் இணையாக வாசிக்க முடியும். காலக்கண்ணாடியின் முன் நிர்வாணமான வாழ்வை மீட்டெடுக்க முயல்கிறது இந்நாவல்
Book Details
Book Title அகதியின் பேர்ளின் வாசல் (Agathiyin berlin vasal)
Author ஆசி.கந்தராஜா (Aasi.Kandharaajaa)
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Year 2024
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கள்ளக் கணக்கு - ஆசி.கந்தராஜா : (சிறுகதைகள்)பல்வேறு நாடுகளின் பண்பாட்டுப் புலத்தில் எழுதப்பட்டிருக்கும் பதின்மூன்று சிறுகதைகளின் தொகுப்பே இந்நூலாகும்...
₹138 ₹145
இந்நூல் தாவரங்களைப் பேசும் கட்டுரை நூல் என்று லௌகீக நிர்ப்பந்தங்களுக்காகப் புத்தக விவரத்தில் தரப்பட்டுள்ளது. ஆனால் இது உண்மையில் தாவரங்களை நிமித்தமாகக் கொண்டு . மனிதர்களின் மெய்யுரைத்த நூல். மண்தான் தாவரங்களையும் வளர்க்கிறது, மனிதர்களையும் புரக்கிறது. சில கூடுதல் அறிவுடன் மனிதன் இடம்பெயரும் தாவரம்;..
₹214 ₹225