Menu
Your Cart

பௌத்த வேட்கை

பௌத்த வேட்கை
-5 %
பௌத்த வேட்கை
₹323
₹340
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
புத்தரின் போதனையை மகாராஷ்டிர மக்களிடம் கொண்டுசெல்வதற்காகப் பெருமளவு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை, தர்மானந்த கோஸம்பியின் வாழ்க்கை (1876 -1947). இந்தத் தொண்டு, ஒரு பௌத்த அறிஞராக இந்தியாவிலும் அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் அவர் மேற்கொண்ட கல்விப்புலப் பணிகளோடு இயைந்து செயல்பட்டது. ஒரு சிந்தனையாளராக அவர் சமத்துவம், உலக அமைதி இவை சார்ந்த கருத்துக்களைத் தேசிய எல்லைகளைத் தாண்டியும் பரப்ப முயன்றார். சோஷலிச சித்தாந்தத்தைப் பௌத்த அறவியலோடு பொருத்தி, இவ்விரண்டையும் காந்தியத்தின் வாய்மை, அஹிம்சை இவற்றோடு இணைத்துக் கொண்டுசெல்ல முனைந்தார். பௌத்தத்தை உயிர்ப்பித்து அதை வாழும் சமயமாக ஆக்கிய பெருமை தர்மானந்தரையே சாரும். பௌத்தத்தின் போதனைகளையும் நடைமுறைகளையும் மீட்டுக் கொண்டுவந்ததோடு நில்லாமல், சமகாலத்தியச் சமூக, அரசியல் சித்தாந்தங்களோடு அதற்குள்ள பொருந்தப்பாட்டையும் நிறுவிக்காட்டினார். புதியதொரு ஒருங்கிணைந்த உலகப் பார்வையை உருவாக்கினார். இதை எதற்காக, எவ்வாறு உருவாக்கினார் என்பதைத்தான் இந்தத் தன் வரலாறு விவரிக்கிறது.
Book Details
Book Title பௌத்த வேட்கை (Bautha vetkai)
Author தர்மானந்த கோசாம்பி (Tharmaanandha Kosaampi)
Translator தி.அ.ஸ்ரீனிவாஸன் (Thi.A.Srinivasan)
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Year 2024
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Buddhism | பௌத்தம், 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

படைப்புணர்வின் வரம்பிற்குள் மானிட வாழ்வின் எல்லாப் பரிமாணத்தையும் கொண்டுவர முயன்ற ஒரு பேராசைக்காரப் படைப்பாளியின் உன்னதப் படைப்பு இந்த நாவல். இரண்டாம் உலகப் போர்க்காலத்து இஸ்தான்புல்லின் பின்னணியில், தனிமையுணர்வும் சஞ்சலமும் அன்புக்கான ஏக்கமும் கொண்ட ஒருவனின் காதலையும் பிரிவின் வேதனையையும் சொல்க..
₹475 ₹500
ஊரும் சேரியும்  - சித்தலிங்கையா (தன் வரலாறு):..
₹200
மூன்று பெண்கள், மூன்று தலைமுறைகள், மூன்று உலகங்களைக் கோர்த்துப் பின்னப்பட்ட கதை இது. பால்யத்தில் விதவையாக்கப்பட்ட அத்தையம்மாவுக்கு அவரிடமிருந்து பறிக்கப்பட்ட இளமைகாலக் கனவுகள், ஆசைகள் இவற்றின் இடத்தை அவர் வைத்துக்கொண்டிருக்கும் நகைகளின் மதிப்பு அளித்துள்ள அதிகாரம் ஈடுசெய்கிறது. மரணத்திற்குப் பிறகும்..
₹119 ₹125
இந்திய நாகரிகம் பற்றிப் பேசும்போதெல்லாம், அகிம்சாவாதிகளான, சகிப்புத்தன்மையுடைய, உயர்ந்த லட்சியங்களுக்காகவே வாழ்ந்த மக்களைக் கொண்ட சமூகம் என்ற சித்திரமே முன்னிறுத்தப்படுகிறது; எதிர்ப்புக் குரல்கள் பற்றிய பேச்சே இருப்பதில்லை. ரொமிலா தாப்பர் இந்த நூலில், இந்திய வரலாற்றின் மூன்று காலகட்டங்களைச் சேர்ந்த ..
₹190 ₹200