Menu
Your Cart

கண்ணகி(நாவல்)

கண்ணகி(நாவல்)
-5 %
கண்ணகி(நாவல்)
₹219
₹230
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
லஞ்சங்களும் அதிகாரங்களும் தலைவிரித்தாடும் அரசு அலுவலகங்கள் நிறைந்த சாலை அது. அரசு விருந்தினர் “மாளிகை” உள்ள சாலையில் இளநீர் முதல் இறைச்சி வரை கூவிக்கூவி விற்கும் சிறுவியாபாரிகள். அவர்களில் ஒருத்தி தான் அதிகாலையிலயே தனது ஜொலிப்பான மீன் கடையை விரித்து திறமையான பேச்சுத்திறமையோடு வியாபாரம் செய்யும் கண்ணகி. உதாரணமாக ஒருகிலோ மீன் வாங்க வந்த வாத்தியாரை 2அரை கிலோ மீன் வாங்க வைத்தல். அவளிடம் வேலை செய்யும் (மீன் கழுவி அரிந்துபோடும்) நான்கு பெண்கள். நான்கு பெண்கள் கண்ணகியைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? இரவு சமைப்பதை மட்டுமே உண்டு வாழும் இந்த கண்ணகி யார்? எப்படி இவ்வளவு துணிச்சலான பெண்ணாக இருந்து வருகிறாள்? விரிகிறது ப்ளாஸ்பேக்! சித்தேரிக்குப்பம் ஊர்த்தெருவை விட்டு ஒதுங்கி இருந்த காலனியில் வசித்து வந்தார் காசாம்பு. மாட்டுக்கறி கூறுபோட்டு விற்பவர். காசாம்புக்கு 3 பொண்டாட்டிகள், 17 மகன்கள், ஆசைக்கு ஒரேயொரு பெண். மகள் கசந்தாமணி மீது தனிப்பாசம். தன்னுடன் மாட்டுத் தரகு செய்யும் அஞ்சாம்புலிக்கு கட்டிக்கொடுத்தார். கொளப்பாக்கம் தான் அஞ்சாம்புலியின் சொந்த ஊர். திருமணம் ஆன பிறகு குடிசைபோட்டு வாழத்தொடங்குகிறார்கள். மாடு வாங்கி வளர்க்கிறார்கள். கண்ணகி பிறக்கிறாள். அவள்மீது காசாம்புக்குப் பாசம் அதிகமாகிறது. தாத்தா காசாம்பு போட்டுத்தரும் மஞ்சள்தூள் போட்டு அவித்து தந்த கறியை வழிநெடுக தின்றுகொண்டே செல்லும் கண்ணகி… அவளை அடுத்து பிறக்கும் தம்பி… தன் வீட்டிலிருந்து மறுபக்கம் உள்ள ஆற்றங்கரை பிள்ளையார் கோயில்… அதையடுத்து உள்ள ரைன்கர தெரு… இரவுநேர ரகசியம்… புஷ்பா அக்காவைப் பற்றிய ரகசியம் அறிய முற்படும் கண்ணகி…
Book Details
Book Title கண்ணகி(நாவல்) (Kannagi)
Author சு.தமிழ்ச்செல்வி (S. Tamilselvi)
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 230
Published On Mar 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கற்றாழைமாணிக்கம், அளம், கீ தாரி போன்ற நாவல்கள் மூலம் உழைக்கும் பெண்களின் உலகை அதன் பூரண வலிகளுடன் காட்டியுள்ள சு.தமிழ்ச்செல்வியின் நான்காவது நாவல் ‘கற்றாழை’. எத்தகைய வறட்சியிலும் தன்னை தகவமைத்துக் கொண்டு உயிர்த்திருக்கும் கற்றாழை பெண்ணின் உருவகம்.சிற்றூர் பின்னணி கொண்ட மணிமேகலை என்னும் சாதாரணப் பெண்..
₹380 ₹400
கீதாரிமாணிக்கம் புதினத்திற்காக தமிழக அரசின் விருதும், கற்றாழை புதினத்திற்காக த,மு.எ.ச விருதும் பெற்றவர் சு.தமிழ்ச்செல்வி.தீவிர இயங்கு தன்மையும் படைப்பூக்கமும் இயல்பாகக் கொண்ட சு.தமிழ்செல்வியின் மூன்றாவது நாவல் ‘கீதாரி;, வாழ்தலின் நிமித்தம் புலம்பெயரும் அனுபவத்தின் வலியை ‘பொற்றேகாட்’டின் ‘விஷக்கன்னி’..
₹200 ₹210
ஆறுகாட்டுத் துறைமாணிக்கம் புதினத்திற்காக தமிழக அரசின் விருதும், கற்றாழை புதினத்திற்காக த,மு.எ.ச விருதும் பெற்றிருக்கும் சு.தமிழ்ச்செல்வியின் ‘ஆற்காட்டுத்துறை’ தமிழின் குறிப்பிடத் தகுந்த படைப்புகளின் வரிசையில் இடம்பெறும் வலிமையைப் பெற்றிருக்கிறது...
₹228 ₹240